பல விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க, விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.