Site icon Tamil News

செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடபட்டது.

அன்னை அறவணைப்பு கல்வி அறக்கட்டளை மற்றும் சோலை ஷிப்பிங்க் நிருவணம் சார்பில் அன்னை அறவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் தேவி மணி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் நிர்வாகிகள் மற்றும் தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு செவிலியர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அனைத்து செவிலியர்களும் சிறந்த முறையில் பணியாற்றுவது என உருதிமொழியேற்றனர்.

பின்னர் அனைத்து செவிலியர்களுக்கும் பரிசுகள் மற்றும் உணவு வழங்கினர். இதில் இனை இயக்குனர் மருத்துவர் தீர்த்தலிங்கம், தலைமை மருத்துவ அலுவலர் பழனிவேல், சோலை ஷிப்பிங்க் நிறுவனர் மணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version