Site icon Tamil News

சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

வெளிச்சந்தையில் போதியளவு சோளம் கையிருப்பு இல்லாத காரணத்தினால் 15,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கோழி தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக நடவடிக்கையாக இந்த சோளம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

இலங்கை அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் லிமிடெட் இந்த மக்காச்சோளத்தை பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு சப்ளையர்களிடமிருந்து இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Exit mobile version