அரச அதிகாரிகளுக்கோ அல்லது வேறு எந்தவொரு நபருக்கோ வாகனங்களை வரியின்றி இறக்குமதி செய்யவோ அல்லது அவற்றுக்கான அந்நிய செலாவணியை ஒதுக்கவோ அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கேற்ப செயற்பட விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
நாம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, வாகன இறக்குமதிக்கான வரம்புகளைத் தளர்த்துகிறோம்.
ஒப்பந்தத்தின் படி, பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகள் மற்றும் முன்நிபந்தனைகள் உள்ளன. வெளிநாட்டு கையிருப்புகளை குறைக்கும் செலவில் எங்களால் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம், அவர்களின் யோசனைகளை கருத்திற் கொண்டு நடைமுறையொன்றை உருவாக்குவதற்கு விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, 2025 முதல் வாகன இறக்குமதியில் இருக்கும் வரம்புகளை தளர்த்தும் விருப்பத்தை விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.