துருக்கியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்தான்புல் விமான நிலையத்தில் வேலைத்திட்டம் ஒன்றில் பணிபுரியும் 39 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையை விட்டு விலகி 6 மீட்டர் பாறையில் கவிழ்ந்தது.
காயமடைந்த பயணிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குழுவினருக்கு உதவுவதற்காக தூதரக பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகம் அறிவித்துள்ளது.