Site icon Tamil News

பிரித்தானியாவின் ரயில் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்!

ASLEF இன் ரயில் ஓட்டுநர்கள் இந்த வார இறுதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளனர்.

இது அடுத்த வாரத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மிட்லாண்ட்ஸ் ரயில்வே மற்றும் LNER இல் உள்ள யூனியன் உறுப்பினர்கள் இன்றைய (02.12) தினம் வெளிநடப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையத் தொடர்ந்து நாளைய தினம் (03.12)  நான்கு வழித்தடங்களில் ஓட்டுநர்கள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல இடங்களில் ரயில் தாமதம், ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version