Site icon Tamil News

உலகளவில் மீண்டும் ஏற்பட்டுள்ள ஆபத்து – பிரித்தானியா பரபரப்பு எச்சரிக்கை

உலகளவில் அல்கொய்தா ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியா இந்த ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரித்தானியா அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவ் மேன் பிரித்தானியா இப்போது உள்நாட்டு தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

கணிப்பதற்கு சாத்தியம் குறைவாகவும் புலனாய்வு செய்து விசாரணை நடத்த கடுமையாகவும் இத்தீவிரவாதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது போல இப்போது இல்லை என்ற போதும் மீண்டும் அல்கொய்தா ஐஎஸ் போன்ற இயக்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக சுவெல்லா பிரேவ்மேன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version