Site icon Tamil News

சீனாவின் ஊழியர்களை உளவாளிகளாக மாற்றிய பிரித்தானியா!

சீன மத்திய அரசின் இரு ஊழியர்களை உளவாளிகளாக மாற்றியதாக பிரித்தானியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாநில பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இரண்டு உளவாளிகளான திருமணமான தம்பதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சீன அமைச்சகம் தனது அறிக்கையில், வாங் என்ற குடும்பப்பெயரைக் கொண்ட நபர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவில் படிதத்ததாகவும், அக்காலப்பகுதியில் MI6 இரகசியமாக ஏற்பாடு செய்த இரவு உணவுகள் மற்றும் சுற்றுப்பயணங்களுக்கு அவர் அழைக்கப்பட்டதாகவும் கூறியது.

பணத்தின் மீது வலுவான ஆசைக் கொண்ட குறித்த நபர், உளவுப் பயிற்சிக்குப் பிறகு, MI6 அதன் அரசாங்கம் தொடர்பான முக்கியமான தகவல்களைச் சேகரிக்க சீனாவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முக்கிய அரசாங்கப் பிரிவில்” பணிபுரிந்த தனது மனைவியை இரட்டிப்புப் பணத்திற்கு மாற்றுமாறு MI6 வாங்கை வற்புறுத்தியதாகவும் அமைச்சகம் கூறியது.

ஜோ என்ற குடும்பப்பெயர் கொண்ட மனைவி இறுதியில் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் உளவாளிகளாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version