Site icon Tamil News

கறிக்கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டு

குன்றத்தூர், மேத்தா நகரை சேர்ந்தவர் பத்மகுரு(42), குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடையில் இருந்தபோது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பத்மகுருவை சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் பலத்த காயமடைந்த பத்மகுரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தபோது கடந்த ஆண்டு பத்மகுரு வீட்டிற்கு வந்து தகராறு செய்தபோது மத்திய அரசு ஊழியரான குமரன் என்பவரை பத்மகுரு கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்தாக தெரியவந்தது.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்மகுரு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் இறந்து போன பத்மகுரு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version