Site icon Tamil News

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு: வெளியான புதிய தகவல்கள்

சந்தேக நபரை பின்தொடர்ந்து கால்வாயில் குதித்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம், சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரிகளால் துரத்தப்பட்டு, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கால்வாயில் குதித்துள்ளார்.

நான்கு காவல்துறை அதிகாரிகள் அதைத் தொடர்ந்து கால்வாயில் குதித்தனர்,

அதன் பிறகு அவர்களில் ஒருவர் காணவில்லை என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென நீருக்கடியில் சென்றுவிட்டு மீண்டு வரவில்லை என நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் நீர்கொழும்பு பமுனுகம குளக்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version