Site icon Tamil News

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை – சிக்கிய சந்தேக நபர்கள்

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 6 சந்தேக நபர்கள் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

22.5 மில்லியன் டொலர் Pearson தங்கக் கொள்ளையில் பலர் கைது செய்யப்பட்டதுடன், 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்த ஓராண்டு நிறைவையொட்டி புதன்கிழமைநடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Peel பிராந்திய பொலிஸார் இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவர் Air Canada ஊழியர்கள் என Peel பிராந்திய பொலிஸார் தலைவர் நிஷான் துரையப்பா அறிவித்தார்.

இவர்கள் இருவரும் இந்த திருட்டில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.

இந்த திருட்டில் ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக மொத்தம் 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாவும், இதுவரை கைது செய்யப்படாத சந்தேக நபர்களை கைது செய்ய கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version