Site icon Tamil News

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பைடன் மறுபிசீலனை செய்ய வேண்டும் ; ஒபாமா

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகக் கோரி பராக் ஒமாபா தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாநாயக வேட்பாளரகா தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக போட்டியிடுகிறார்.

இந்திலையில் பைடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதை மறுபரீசீலனை செய்யவேண்டம் எ்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியினரிடையே கூறி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

ஏனெனில் போட்டிகள் நிறைந்த முக்கியமான 7 மாநிலங்களில் பைடனுக்கு ஏதிர்மறையான முடிவுகளே கிடைத்துள்ளன. இதனால் தான் ஜோ பைடனை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஒபாமா கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதத்தின் போதே பைடனின் தடுமாற்றம் பேசுபொருளாகியது.

அப்போதிலிருந்தே அவர் அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. தேர்தலில் பைடன் போட்டியிடுவதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு கூறி ஜனநாயக கட்சியின் 264 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் வரையில் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து பலரும் தனிப்பட்ட முறையில் தங்களின் எதிரான கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

 

Exit mobile version