Tamil News

மார்பகங்களை பெரிதாக்க வைத்தியசாலைக்கு ஓடிய நடிகை??? மீண்டும் வெடித்த சர்ச்சை

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிவருபவர். அவர் பேசுவதில் எதுவுமே உண்மை இல்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தொடர்ந்து அப்படி பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்தச் சூழலில் நடிகை தீபா குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இப்படி பேசுவதை இவர் எப்போதுதான் நிப்பாட்டுவார் என்றும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை தீபா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், “இளம் வயதிலேயே நடிக்க வந்தவர் தீபா. 90களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தார்.

அவர் நடிக்க வந்தபோது ஒரு இயக்குநர் தீபாவிடம், உங்களுக்கு மார்பக பகுதி சிறியதாக இருக்கிறது; கவர்ச்சி தூக்கலாக வேண்டும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். உடனே தீபா மருத்துவமனைக்கு சென்று சில மருந்துகளை எடுத்துக்கொண்டார்.

அதை சாப்பிட்டதும் அவரது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. பிறகு ஒரு ஆபரேஷனும் செய்துகொண்டார் அவர்” என்றார்.

நடிகை தீபா 90களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஜானி, முந்தானை முடிச்சு, கூட்டு புழுக்கள், வாழ்க வளர்க, கல்யாண பறவைகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவற்றில் ஜானியும், முந்தானை முடிச்சு படமும் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version