Tamil News

வட்டி விகிதத்தை ஐந்து விகிதமாக உயர்த்திய இங்கிலாந்து வங்கி

இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கி பேங்க் ஆஃப் இங்கிலாந்து கடனுக்கான வட்டி விகிதங்களை 4.5% இல் இருந்து 5% ஆக அதிகரித்துள்ளது.

இது 15 ஆண்டுகளில் மிக உயர்ந்த அதிகரிப்பாகும். பெரும்பாலான முன்னறிவிப்பாளர்கள் எதிர்பார்த்ததை விட இது பெரிய அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

“நாங்கள் இப்போது விகிதங்களை உயர்த்தவில்லை என்றால், அது பின்னர் மோசமாகிவிடும்” என்று பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மத்திய வங்கியின் நிதி கொள்கை குழுவில் உள்ள உறுப்பினர்களில் 7 பேர் 5% விகிதத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் இருவரும் எந்த மாற்றத்தையும் விரும்பவில்லை. இந்த குழுவில் மொத்தமாக 9 உறுப்பினர்கள் உள்ளனர்.

Exit mobile version