Site icon Tamil News

குஜராத் மாநிலத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை: மின்னல் தாக்கி 20 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சீரற்ற காலநிலையினால், விவசாயிகளின் பல ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version