Site icon Tamil News

காசாவில் மனிதாபிமான உதவிகளை பெறச் சென்றவர்கள் மீது தாக்குதல் : பலர் உயிரிழப்பு!

காசா நகரில் மனிதாபிமான உதவிக்காக பாலஸ்தீனியர்கள் திரண்டிருந்தபோது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு மற்றும் சாட்சிகள் தெரிவித்தனர்.

இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா நகரின் தெற்கு விளிம்பில் உள்ள ஒரு ரவுண்டானாவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் பல உதவி நிறுவனங்கள் உணவு மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கின்றன. சம்பவத்தின் போது அப்பகுதியில் எது இயங்கியது என்பது உடனடியாக தெரியவில்லை. பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. அகதிகள் நிறுவனம், UNRWA மற்றும் U.N. உலக உணவுத் திட்டம் ஆகிய இரண்டும் தாங்கள் இதில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளன.

Exit mobile version