Site icon Tamil News

ஜெருசலேமிற்கு அருகில் உள்ள சோதனை சாவடியில் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல்!

ஜெருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சோதனைச் சாவடியில் இரு பாலஸ்தீனியர்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல் காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரைத் தூண்டியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

குறைந்தது 427 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இஸ்ரேலியப் படைகளுடனான மோதலின் போதே மேற்படி உயிரிழப்புகள் பதிவாகியதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில், ஜெருசலேமில் உள்ள ஒரு முக்கிய புனித தலத்தை அணுகுவது தொடர்பாக இஸ்ரேல்-பாலஸ்தீன பதற்றங்கள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான ஊடுருவலின் போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 250 பேர் கடத்தப்பட்டனர். ஹமாஸ் இன்னும் 100 பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

31,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், காசாவின் 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version