Site icon Tamil News

அமெரிக்காவில் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்கச்சென்ற தந்தை – 5 பிள்ளைகள் மரணம்

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தந்தை கிறிஸ்துமஸுக்குப் பரிசுகளும் இதரப் பொருள்களும் வாங்கச் சென்றிருந்த போது வீட்டில் பரவிய தீயில் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களில் 4 பேர் அவரது பிள்ளைகள். மேலும் ஒருவர் உறவுக்காரப் பிள்ளை என தெரியவந்துள்ளது. 2 மாடி வீட்டில் பரவிய அந்தத் தீயில் 2, 4, 5, 11, 13 வயதுப் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

எனினும் தந்தையின் பெயரையோ பிள்ளைகளின் பெயர்களையோ பொலிஸார் வெளியிடவில்லை. தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

தீ கீழ்மாடி நுழைவாயிலில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. அதனால்தான் மேல் மாடியில் இருந்த பிள்ளைகளால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் போயிருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட விசாரணை காட்டுகிறது.

தீயை அணைக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கடுமையாக முயற்சிசெய்தனர். ஆனால் வீட்டில் இருந்து வந்த கரும்புகை மிகப் பெரிய தடங்கலாக அமைந்தது.

உயிரிழந்த பிள்ளைகளுக்கு அந்த வீடமைப்புப் பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version