Site icon Tamil News

மெக்சிகோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாகாவில் ஒரு பேரழிவு சம்பவத்தில், புதன்கிழமை ஒரு பயணிகள் பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுடன் தொடர்புகொள்வதற்கான அங்கீகாரம் இல்லாததால், பெயர் தெரியாத நிலையில் பேசிய ஒரு பொலிஸ் அதிகாரி AFP இடம் தொலைபேசியில் இதனை கூறினார்,

“முதற்கட்ட எண்ணிக்கை 25 பேர் இறந்துள்ளனர் மற்றும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் செய்தி நிறுவனமான மிலினியோவின் கூற்றுப்படி, பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது.

இந்த சம்பவம் மக்டலேனா பெனாஸ்கோ நகரில் நடந்ததுள்ளதென, ஓக்ஸாகா ஆளுநர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மாநில போக்குவரத்து காவல்துறையும் ட்விட்டர் மூலம் தகவலைப் பகிர்ந்து கொண்டது,

இந்த பேருந்து மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கு ஓக்ஸாகாவில் அமைந்துள்ள யோசோன்டுவா என்ற நகராட்சிக்கு சென்று கொண்டிருந்தது.

விபத்து தொடர்பான சூழ்நிலைகள் மற்றும் பலியானவர்களின் அடையாளங்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version