Site icon Tamil News

சோமாலியாவில் டிரக் குண்டு வெடித்ததில் 21 பேர் பலி

மத்திய சோமாலியாவின் பெலேட்வேய்ன் நகரில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் வெடித்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 52 பேர் காயமடைந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பில்டுவினில் உள்ள அரசு சோதனைச் சாவடியில் நேற்று டிரக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

“காயமடைந்தவர்களில் இருபது பேர் பெலெட்வேய்ன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்,

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் அமைப்பு, சோமாலியாவில் மத அடிப்படைவாத அரசை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version