Site icon Tamil News

ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவை கல்வி வலயத்திற்குட்பட்ட விஜிதா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தலையில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இன்று (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் புலஸ்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version