Site icon Tamil News

ஐசிசி நீதிமன்றத்தின் நீதிபதிக்கை கைது வாரண்ட் பிறப்பிப்பு!

விளாடிமிர் புட்டினை போர்க்குற்ற குற்றச்சாட்டில் கைது செய்ய பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐசிசி) நீதிபதிக்கு ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

மார்ச் மாதம், உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியதாக ரஷ்ய அதிபர் மீது ஐசிசி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.

குறித்த குறகுற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவின் குழந்தைகள் ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்ய பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஐ.சி.சி எழுப்பிய கேள்விகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version