Tamil News

#Aranmanai4 – சுந்தர்.சி படத்திற்கு எழுந்துள்ள புதுசிக்கல்…

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை4’ திரைப்படம் புது சிக்கலை சந்தித்துள்ளது. இந்த விஷயம் ‘அரண்மனை’ சீரிஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை விடுமுறை என்றாலே கொண்டாட்டத்திற்கு படங்களும் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி ’லால் சலாம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ எனப் பல படங்கள் வரிசைக் கட்டி நிற்கிறது. இந்த வரிசையில் இயக்குநர் சுந்தர்.சியின் ‘அரண்மனை’ படமும் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கி, நடித்தப் படம் ‘அரண்மனை’. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களும் வெளியானது.

இரண்டாம், மூன்றாம் பாகங்கள் கொடுத்த வெற்றி உற்சாகத்தை அடுத்து, இதன் நான்காம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. இது அவருடைய 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா மற்றும் ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

Tamannaah Bhatia Shares First Glimpse Of Sundar C's Horror-Comedy Aranmanai 4; Check It Out - News18

கடந்த செப்டம்பர் மாதம் ’அரண்மனை 4’ திரைப்படம் வருகின்ற 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறைக்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. கடந்த மூன்று பாகங்களும் பிற படங்களின் போட்டி இல்லாமல் வெளியாகி வெற்றிப் பெற்று இருந்தது. ஆனால், இந்த முறை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ள ’அரண்மனை 4’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.

இந்த விஷயம் படத்தின் வசூலை பாதிக்குமோ என தயங்குகிறது படக்குழு. இதனால், பொங்கல் ரேஸில் இருந்து ‘அரண்மனை4’ விலக அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version