Site icon Tamil News

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை விருப்பப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள சண்முகம் குகதாசன் பெறவுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு  அதிக வாக்குகளை பெற்றவர்களின் பட்டியலில் சம்பந்தனுக்கு அடுத்ததாக குகதாசன் இருக்கின்றார்.

அவர் 16770 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார்.

அவரின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதி கிரியைகளுக்காக திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version