Site icon Tamil News

பிரான்ஸில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் Apple ஊழியர்கள்

பிரான்ஸில் உள்ள Apple கடைகளின் 4 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றன.

iPhone 15 ரகத் திறன்பேசி வெளியிடப்படுவதற்கு முன்பு வேலைநிறுத்தம் இடம்பெறவிருக்கிறது.

கூடுதல் சம்பளம், மேம்பட்ட வேலைச்சூழல்களை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன்.

ஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக முன்பு Twitter தளத்தில் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது.

அதனால் 4 தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version