Site icon Tamil News

அநுராதபுரம் மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரச வைத்தியசாலைகளில் மருந்துகளை விநியோகிக்கிக்கும் மருந்தளார்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மருத்துவ மேற்பார்வையில், சிறு தொழிலாளர்கள் மற்றும் செவிலியர்கள் மருந்துகளை வழங்க பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அனுராதபுரம் நொச்சியாகம வைத்தியசாலைளையில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறையால் சில மருத்துவமனைகளில்  வார்டுகளை மூட வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Exit mobile version