Site icon Tamil News

அனுரகுமார ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார்! விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் எனவும், பீதியடைய எந்த காரணமும் இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவது இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

வேட்பாளர்கள் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேல் பெறத் தவறினால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள் தேர்தல் சட்டத்தின்படி கணக்கிடப்பட வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும்,” என்றார்.

Exit mobile version