Site icon Tamil News

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ‌சோதனை

விழுப்புரம்:- விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் மைத்துனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபுவின் தந்தை ஐயப்பா அவருடைய மனைவி தைலம்மாள் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபுவின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ஜிஆர்பி தெருவில் உள்ள பிரபுவின் மைத்துனர் வழக்கறிஞர் சுபாஷ் வீட்டிலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபு கடந்த 2011-16 வரை கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version