Site icon Tamil News

ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி ; இஸ்ரேல் தகவல்

ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

அக்.7 இஸ்ரேல் நாட்டுக்கள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் படையினர் நூற்றுக்கணக்கலில் இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.அப்படி கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை இஸ்ரேலிய அரசு வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அவரின் உடல் காஸாவில் உள்ளதாக தெரிவித்த அரசு எப்போது இறந்தார் என்பது குறித்த விவரங்களை அளிக்கவில்லை இஸ்ரேலுக்கு இந்த தகவல் எப்படி தெரியவந்தது என்பது குறித்து விளக்கம் இல்லை.

கடத்தி செல்லப்பட்ட 250 பேரில் 105 பேர் நவம்பரில் விடுவிக்கப்பட்னர். இஸ்ரேல்,ஹமாஸ் பிடியில் இன்னும் 100 பேர் பிணையில் இருப்பதாக கருதுகிறது.ஆனால் பிணையில் உள்ளவர்களில் கணிசமானோர் இறந்திருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது.

 

Exit mobile version