Site icon Tamil News

மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த 5 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ தினத்தன்று உயிரிழந்தார்.

அதேநேரம் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், குறித்த இரண்டு சிறுவர்களில், கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் குழுவொன்று பாடசாலை வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள காணியில் இருந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

Exit mobile version