மேலும் 211 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாய துறையில் வேலை செய்வதற்காக இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த வருடத்தில் ஒரே நேரத்தில் இஸ்ரேலில் வேலைக்குச் செல்லும் அதிக எண்ணிக்கையிலானோர் இதுவாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இன்று விசேட நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.
இதன்போது , ஜூம் தொழில்நுட்பத்தினூடாக இணைந்துகொண்ட தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தற்போது இஸ்ரேலில் விவசாய வேலைகளை பெற்றுள்ள இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 361 ஆகும்.