Site icon Tamil News

ஆந்தையா? தாவரமா? : வேர்ல்ட் நேச்சர் ஃபோட்டோகிராபியில் விருதை வென்ற புகைப்படம்!

கோபமான முகத்துடன் ஒரு சிறிய மரகத-பச்சை ஆந்தையை ஒத்த, அதிகம் அறியப்படாத மற்றும் மர்மமான தாவரத்தின் படம் உலகளாவிய புகைப்பட போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளது.

இது ஒரு பறவை போல் தோன்றினாலும், படம் உண்மையில் ஒரு ஒட்டுண்ணி தாவரமாகும்.

மேலும் தாய்லாந்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் புகைப்படக் கலைஞர் சத்ரீ லெர்ட்சின்டனகார்ன் என்பவரால் இது படம்பிடிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வேர்ல்ட் நேச்சர் ஃபோட்டோகிராபி விருதுகளில் இந்த படம் உள்ளீர்க்கப்பட்டதுடன், பரிசை தட்டிச் சென்றுள்ளது.

“Phisawong Ta Nok Hook” – அல்லது ஆங்கிலத்தில் “mysterious owl eye” என்று அழைக்கப்படும் இந்த ஆலை, அதன் வாழ்நாளின் பெரும்பகுதியை நிலத்தடியில் செலவழிக்கிறது.

மரங்களின் அடிவாரத்தில் வளரும் சுமார் 2 முதல் 8 மில்லிமீட்டர் நீளம் மட்டுமே. அது முழுவதுமாக வளர்ந்தவுடன் மண்ணுக்கு மேலே முளைத்து அதன் விசித்திரமான தோற்றம், பறவை போன்ற உடலை வெளிப்படுத்துகிறது.

Exit mobile version