Site icon Tamil News

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள் – ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2300ஐத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43083 ஆகவும், அதில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி 7 நாட்களில் 13693 இந்திய சுற்றுலா பயணிகளும் 3455 பிரித்தானிய சுற்றுலா பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் மூன்றாவது பெரிய குழு சீனாவிலிருந்து வந்தது, ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் 4 வது இடத்தைப் பிடித்தனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,053,332 ஆகும்.

Exit mobile version