Site icon Tamil News

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தொலைப்பேசி இலக்கங்களை உடன் வழங்குமாறு பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

குறிப்பாக தெற்கு லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்களை உடனடியாக வழங்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 070386754, 071960810 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version