Site icon Tamil News

இங்கிலாந்தின் எடின்பரோவில் உள்ள வீடொன்றில் வெடிவிபத்து!

இங்கிலாந்தின் எடின்பரோவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (01.12)  இரவு 10.25 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை ஐந்து வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்ததுடன், இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், எரிவாயு வெடித்ததன் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version