Tamil News

திருகோணமலையில் வயோதிபரின் உயிரை பறித்த யானை

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இச்சம்பவம் இன்று (07) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை ராசலிங்கம் (69வயது) எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த போது யானை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் விசாரணைகளை மூதூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version