Site icon Tamil News

ஜேர்மனியில் மே தின நிகழ்வில் நடத்த விபரீதம் : பலர் படுகாயம்!

ஜெர்மனியில் மே தினக் கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற விபத்தில் ஏறக்குறைய 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 10 பேர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜெர்மனியின் ஃப்ரீபர்க் நகருக்கு அருகில் விவசாய இயந்திரம் மூலம் இழுத்துக் கொண்டிருந்த டிரெய்லர் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து சில ஹெலிகாப்டர்கள் வருகை தந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.

 

Exit mobile version