தனக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் அமெரிக்கர்கள் பொறுமை இழந்து விடுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் அடுத்த மாதம் 15-ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில், அதற்கு 4 நாட்களுக்கு முன் அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தேர்தல் நிதி திரட்டிவரும் டிரம்ப், குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அடுத்த 2 நாட்களில் மட்டும் இந்திய பணத்தில் சுமார் 600 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.