Site icon Tamil News

ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

“தொழில்நுட்ப” சிக்கல்கள் காரணமாக இங்கிலாந்து செல்லும் விமானம் ரஷ்யாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து பெர்மிங்ஹாமிற்கு பயணித்தை தொடங்கிய நிலையில்,  மாஸ்கோவில் உள்ள ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் தரையிறங்கிய விமானத்தில் 258 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.

இது தொடர்பில் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக விமானத்தின் பணியாளர்கள் ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தைக் கோரினர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version