Site icon Tamil News

கடிதம் எழுதிவிட்டு ஒருவயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்!

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது ஒரு வயதுடைய மகளுமே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண், தானும் குழந்தையும் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அத்துடன் கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஏரிக்கு அருகில் வைத்துவிட்டு இன்று (23.08) காலை தனது சிறு குழந்தையுடன் ஏரியில் குதித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஏரியில் தாயின் சடலம் மிதப்பதாகவும், குழந்தையின் சடலம் ஏரியில் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version