இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் தனுஷ். தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வட சென்னை பாணியில் அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நித்யா மேனன் நடித்து வருவதாக தகவல் வந்தது.
இப்படத்தை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய தனுஷ் முதல் காதல் குறித்து பேசியுள்ளர்.
அதில் அவர், நான் 16 வயது இருக்கும் போது என்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தேன்.
மற்ற ஆண்களை போல தான் நானும் அந்த பெண்ணை கவர நினைத்து நிறைய விஷயங்கள் செய்தேன்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். ஒரு வருடம் கழித்து காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னை தூக்கி எறிந்துவிட்டார் என்று தனுஷ் கூறியுள்ளார்