Tamil News

மெய் மறந்து முத்தம் கொடுத்த சிம்பு.. அமைதியாக நின்ற த்ரிஷா… VTV கிசு கிசு

முத்த காட்சி ஒன்றில் இயக்குநர் கட் சொல்லியும் நடிகர் சிம்பு நடிகைக்கு மெய் மறந்து முத்தம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், சினிமாவின் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை, நடிகர்கள் பற்றி பல அந்தரங்கமானா விஷயத்தை யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.

அப்படி பல சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி பல பிரச்சனையிலும் தானா சென்று மாட்டிக்கொண்டுள்ளார். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசி வருகிறார்.

அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றில், பயில்வான் ரங்கநாதன் சிம்பு குறித்து பேசி உள்ளார். அதில், விண்ணைத்தாண்டி வருவாயா படம் அருமையான காதல் திரைப்படம் இந்த திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷாவின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்டிரி பக்காவாக இருந்தது. சிம்புவின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் பல முத்தக்காட்சிகள் இருக்கும் இந்த காட்சி படமாக்கப்பட்ட போது, கௌதம் மேனன் கட் சொல்லியும் மெய்மறந்து போன சிம்பு தொடர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

சிம்பு கொடுத்த முத்தத்தை மறுக்க முடியாமல் நடிகை த்ரிஷாவும் அமைதியாக நின்றார் என்று அப்படியே வெளிப்படையாக பேசி உள்ளார்.

பயில்வான் ரங்கநாதனின் இந்த பேட்டியால் கடுப்பான சிம்பு பேன்ஸ், இது எல்லாம் பழைய கதை, இதை எதற்கு இப்போது பேசுறீங்க, அவர் இப்போது அனைத்தையும் மறந்து, திருந்தி நடிப்பின் மீது கவனத்தை திருப்பி உள்ளார்.

இந்த நேரத்தில் இதுதேவையில்லாத பழைய கதையை பேசி அவர் பெயரை ஏன் மீண்டும் கெடுக்குறீங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதே போல த்ரிஷா மீண்டும் தனது ரவுண்டு வருவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதன் இப்படி அவர் மீது வன்மத்தை கக்குகிறீர்கள் என்று த்ரிஷாவின் ரசிகர்கள் பயில்வானை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

 

 

Exit mobile version