Site icon Tamil News

வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

அரசாங்கத்தின் கொள்கைக்கமையவும்  ஏற்கனவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும் வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் காஞ்சன விஜய சேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்வரும்,  ஜூலைக்குள் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

மின்சாரசபை மறுசீரமைப்புக்களுக்கமைய புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விலை சூத்திரம் 20 ஆண்டுகளுக்கொருமுறை மாறக் கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version