Site icon Tamil News

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ரணில்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயம் என்றும், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், அவர் வெற்றிப்பெறுவார் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் 2024இல் இடம்பெற இருக்கிறது. அதில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவது நிச்சயமாகும். அதேபோன்று அதில் அவர் வெற்றி பெறுவதும் உறுதியாகும்.

அவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடமாட்டார்.  ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதும் உறுதியாகும். ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைப்பது நிச்சயமாகும்.

ஏனெனில் தற்போதே கட்சிகளில் இருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பலரும் முன்வந்திருக்கின்றனர். எதிர்காலத்தில் இன்னும் பலர் எம்முடன் இணைந்துகொள்ள இருக்கின்றனர் என்றார்.

Exit mobile version