Site icon Tamil News

இரசாயன உரங்களுக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்க நடவடிக்கை

இரசாயன உரங்களுக்கு விதிக்கப்படும் வற் வரியை அடுத்த ஆண்டு பருவத்தில் நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பருவப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான அனைத்து இரசாயன உரங்களும் பழைய விலைக்கே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் விற்பனை செய்யப்படும் இரசாயன உரங்களுக்கு VAT அறவிடப்படவில்லை என்பதால் அதற்கு VAT வரியை சேர்த்து உரங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version