Site icon Tamil News

லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள கிரியாத் ஷ்மோனா நகரில் உள்ள மக்களை  வெளியேற்றும் திட்டத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேலிய துருப்புக்களும் போராளிகளும் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டிருக்கும் எல்லைக்கு அருகிலுள்ள நகரத்தில் வசிப்பவர்கள் அரசு மானியம் பெறும் விருந்தினர் மாளிகைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரியாத் ஷ்மோனாவில் 20,000க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளனர்.  இந்த வார தொடக்கத்தில் எல்லையில் இருந்து இரண்டு கிலோமீட்டர்களுக்குள் இருந்த 28 சமூகங்கள் இஸ்ரேலால் வெளியேற்றப்பட்டுள்ளன.

Exit mobile version