Site icon Tamil News

தேசிய காணி கொள்கையை ஸ்தாபிக்க நடவடிக்கை!

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கில் கணிசமான காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09.08) விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த காணிகளில் 90 முதல் 92 வீதமானவை திட்டமிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த காணியில் 22,919 ஏக்கர் காணி அடங்குவதாகவும் அதில் 817 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் 22,101 ஏக்கர் தனியார் காணிகள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியின் அளவு 3754 ஏக்கர் எனவும் அதில் 862 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் 2832 ஏக்கர் தனியார் காணிகள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய காணி ஆணைக்குழு மற்றும் தேசிய காணி கொள்கையை விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version