Site icon Tamil News

இலங்கையில் ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

டெங்கு பரவும் இடங்களை அழிப்பதற்கு ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுமென கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பி.கே. புத்திக மகேஷ் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கவனத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில், விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் இப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் 05 பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 06 பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 08 பிரிவுகளும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

Exit mobile version