Tamil News

காஞ்சனாவில் நடித்தது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு: திருநங்கை பிரியா

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்தில் நடித்தது என்று திருநங்கை பிரியா கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ், கோவா சரளா, ராய் லட்சுமி மற்றும் சரத்குமார் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா.

மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் திருநங்கை பிரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியா, “காஞ்சனா படத்தின் வெற்றிக்கு பிறகு நான் கோடிக்கணக்கில் சம்பாதிப்பேன் என்று மக்கள் நினைப்பார்கள், ஆனால் அப்படி இல்லை, என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனாவில் நடித்ததுதான்.

அந்தப் படத்தில் நடிக்கும் முன், நான் சாதாரண திருநங்கை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

ஆனால் அந்த படத்தில் நடித்த பிறகு எனக்கு ஒரு படம் கூட கிடைக்கவில்லை, எங்கும் வேலை கிடைக்கவில்லை” கூறினார்.

Exit mobile version