Site icon Tamil News

லார்ட்ஸ் மைதானத்தில் அசித பெர்னாண்டோவிற்கு கிடைத்த அங்கிகாரம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களைப் பெற்றது.

அதேநேரம் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அசித பெர்னாண்டோ லார்ட்ஸ் கவுரவப் பலகையில் இடம்பெறறுள்ளார்.

அவர் 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் சதம் அடித்த, ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அல்லது ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த மதிப்புமிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 

தொடக்கத்தில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பெயர்கள் மட்டுமே இந்த வாரியத்தில் சேர்க்கப்பட்டன, பின்னர் லார்ட்ஸில் நடந்த ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பெயர்களும் இந்த வாரியத்தில் சேர்க்கப்பட்டன.

Exit mobile version